Sunday, 8 March 2020


ஓன்று படுவோம் வெல்வோம்...
ஜெய் ஸ்ரீராம்

Wednesday, 13 February 2019

சிவ போற்றி108




சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி என்றும், சிவ அஷ்டோத்திர சத நாமாவளி என்றும் அறியப்படுகிறது.
ஓம் சிவாய போற்றி
ஓம் மஹேஸ்வராய போற்றி
ஓம் சம்பவே போற்றி
ஓம் பினாகினே போற்றி
ஓம் சசிசேகராய போற்றி
ஓம் வாம தேவாய போற்றி
ஓம் விரூபக்ஷாய போற்றி
ஓம் கபர்தினே போற்றி
ஓம் நீலலோஹிதாய போற்றி
ஓம் சங்கராய போற்றி
ஓம் சூலபாணயே போற்றி
ஓம் கட்வாங்கினே போற்றி
ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி
ஓம் சிபி விஷ்டாய போற்றி
ஓம் அம்பிகா நாதாய போற்றி
ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி
ஓம் பக்த வத்ஸலாய போற்றி
ஓம் பவாய போற்றி
ஓம் சர்வாய போற்றி
ஓம் திரிலோகேசாய போற்றி
ஓம் சிதிகண்டாய போற்றி
ஓம் சிவாப்ரியாய போற்றி
ஓம் உக்ராய போற்றி
ஓம் கபாலினே போற்றி
ஓம் காமாரயே போற்றி
ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி
ஓம் கங்காதராய போற்றி
ஓம் லலாடாக்ஷாய போற்றி
ஓம் காலகாளாய போற்றி
ஓம் க்ருபாநிதயே போற்றி
ஓம் பீமாய போற்றி
ஓம் பரசுஹஸ்தாய போற்றி
ஓம் ம்ருகபாணயே போற்றி
ஓம் ஜடாதராய போற்றி
ஓம் கைலாஸவாஸிநே போற்றி
ஓம் கவசிநே போற்றி
ஓம் கடோராய போற்றி
ஓம் திரிபுராந்தகாய போற்றி
ஓம் வ்ருஷாங்காய போற்றி
ஓம் வ்ருஷபாரூடாய போற்றி
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி
ஓம் ஸாமப்ரியாய போற்றி
ஓம் ஸ்வரமயாய போற்றி
ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி
ஓம் அநீச்வராய போற்றி
ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி
ஓம் பரமாத்மநே போற்றி
ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி
ஓம் ஹவிஷே போற்றி
ஓம் யக்ஞ மயாய போற்றி
ஓம் ஸோமாய போற்றி
ஓம் பஞ்வக்த்ராய போற்றி
ஓம் ஸதாசிவாய போற்றி
ஓம் விச்வேச்வராய போற்றி
ஓம் வீரபத்ராய போற்றி
ஓம் கணநாதாய போற்றி
ஓம் ப்ரஜாபதயே போற்றி
ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி
ஓம் துர்தர்ஷாய போற்றி
ஓம் கிரீசாய போற்றி
ஓம் கிரிசாய போற்றி
ஓம் அநகாய போற்றி
ஓம் புஜங்கபூஷணாய போற்றி
ஓம் பர்க்காய போற்றி
ஓம் கிரிதன்வநே போற்றி
ஓம் கிரிப்ரியாய போற்றி
ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி
ஓம் புராராதயே போற்றி
ஓம் மகவதே போற்றி
ஓம் ப்ரமதாதிபாய போற்றி
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி
ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி
ஓம் ஜகத்வ் யாபினே போற்றி
ஓம் ஜகத் குரவே போற்றி
ஓம் வ்யோமகேசாய போற்றி
ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி
ஓம் சாருவிக்ரமாய போற்றி
ஓம் ருத்ராய போற்றி
ஓம் பூதபூதயே போற்றி
ஓம் ஸ்தாணவே போற்றி
ஓம் அஹிர் புதன்யாய போற்றி
ஓம் திகம்பராய போற்றி
ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி
ஓம் அநேகாத்மநே போற்றி
ஓம் ஸாத்விகாய போற்றி
ஓம் சுத்த விக்ரஹாய போற்றி
ஓம் சாச்வதாய போற்றி
ஓம் கண்டபரசவே போற்றி
ஓம் அஜாய போற்றி
ஓம் பாசவிமோசகாய போற்றி
ஓம் ம்ருடாய போற்றி
ஓம் பசுபதயே போற்றி
ஓம் தேவாய போற்றி
ஓம் மஹாதேவாய போற்றி
ஓம் அவ்யயாயே போற்றி
ஓம் ஹரயே போற்றி
ஓம் பூஷதந்தபிதே போற்றி
ஓம் அவ்யக்ராய போற்றி
ஓம் பகதேத்ரபிதே போற்றி
ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி
ஓம் ஹராய போற்றி
ஓம் அவ்யக்தாய போற்றி
ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி
ஓம் ஸஹஸ்ரபதே போற்றி
ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி
ஓம் அனந்தாய போற்றி
ஓம் தாரகாய போற்றி
ஓம் பரமேஸ்வராய போற்றி
இதை நாளும் ஒதுவோற்கு  ஒரு குறையும் இல்லை என்பது ஞானியர் வாக்கு.....
ஓம் நமசிவாய.......

Wednesday, 7 November 2018

களியுகத்தின் அடையாளங்கள்


  • கலியுக்தின் அடையாளஙகள்








கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்..! இன்று நடப்பதை அன்றே சொன்னார்கள்!
Dhinasari
கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நாDன்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.


5000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.

பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.

ஆச்சரியப்பட தயாராக இருங்கள்.

1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]

2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]

3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். [பாகவத புராணம் 12.2.36)

4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]

5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]

6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
[பாகவத புராணம் 12.2.6]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]

9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]

10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]

11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]

12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]

13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]

14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]

15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளை
புனிதப் படுத்துவர்.